இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 21 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் 2,212 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 142,683 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *