ஜெர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 698 பேர் பலி 26,923 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜெர்மனியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது கடந்த 24 மணிநேரத்தில் 698 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 26,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4833 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.
நேற்று 952 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை இன்று சற்று குறைந்துள்ளது. ஜேர்மன் அரசாங்கம் நேற்று முதல் புதிய கொரோனா தடை கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *