எங்கள் அன்பு ஐயாவே !
அன்போடு பாசம் பண்பு கல்வி
எல்லாவற்றையும் தந்து எங்களை
நல்வாழ்வு வாழ வழி வகுத்த எங்கள்
அன்புத் தெய்வமே ஐயா!
இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து
உறுதியுடன் எமைக்காத்த உத்தமரே
ஆண்டு ஆறு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து கொண்டுருக்கின்றோம் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றென்றும் உங்கள் பாசத்திற்குரிய
பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்