தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி, ஏப்ரல் 10-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஏப்ரல் 22-ந்தேதி, ஏப்ரல் 26-ந்தேதி, ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்களும் அமமுக 4-6, மநீம+0-2: இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:
நிறுவனங்கள் |
திமுக+ |
அதிமுக+ |
அமமுக+ |
ஏ.பி. நியூஸ்- சி வோட்டர் |
160-172 |
58-71 |
0 |
பி.மார்க் |
165-190 |
40-65 |
1-3 |
ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ் |
160-170 |
58-68 |
4-6 |