விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாடிய ஈஸ்டர்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *