அமீரகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரத்து 782 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 262 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,472 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15 ஆயிரத்து 258 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *