பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்தவர் இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். துல்கர் நடிப்பில் தற்போது குருப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குருப் திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர்.