இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது.இதற்கமைய, அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், ராகமை வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பொல்கஸ்ஓவிட பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.மேலும் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.மேலும் 291 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *