மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சியை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை

மியன்மாரின் இராணுவ சதிப்புரட்சியை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.தற்போதைய மியன்மார் ஆட்சியாளர்கள் குறித்த தனது கருத்தினை அரசாங்கம் வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கையில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தமைக்கு மியன்மார் மக்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள நிலையிலேயே வெளிவிவகார செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *