இங்கிலாந்து அரச குடும்பத்தினர் எனது குழந்தையின் நிறம் குறித்து கவலை கொண்டனர்-மேகன் மார்கெல் குற்றச்சாட்டு

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆர்ப் வின்பிரேவுக்கு பேட்டி அளித்தனர். அதில் அரச குடும்பத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளை கூறினர். அவர்களது பேட்டி உலக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அப்போது மேகன் மார்கல் கூறியதாவது ஹாரியின் சகோதரரின் மனைவி கேட் 2018-ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு கொஞ்ச நேரம் முன்பு என்னை அழவைத்தார். அதுதான் திருப்புமுனை. கேட்டை நான் அழவைத்தேனா என்று கேட்கிறீர்கள். அவர்தான் என்னை அழவைத்தார். திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன் கேட் மன அமைதியின்றி இருந்தார். அது மோதல் இல்லை. என்னுடைய திருமணத்தின்போது நான் அனுபவமின்றி இருந்தேன்.

நான் எப்போது அரச குடும்பத்துடன் இணையப் போகிறேன் என்பது தெரியாமல் இருந்தேன். நான் அனுபவமின்றிதான் திருமணத்துக்கு சென்றேன் என்று கூறுவேன். ஏனென்றால், பிரிட்டன் அரச குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியாது.அதிகாரப்பூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று தினத்துக்கு முன்னரே நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். யாருக்கும் தெரியாது. அரச குடும்பத்தினர் எனது குழந்தையின் நிறம் குறித்து கவலை கொண்டனர் என்று என் கணவர் ஹாரி தெரிவித்தார்.எங்களுடைய மகனுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. அதனால், பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. நான் உயிர் வாழவேண்டாம் என்று நினைத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *