வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. குறைந்த தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., முன்வந்ததால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்தது.
இந்நிலையில், இன்று இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், காங்கிரசுக்கு 25 சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், திமுக சார்பில் ஸ்டாலினும், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்து போட்டனர்.