ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி – 14 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தான் மாவட்டத்தில் ஹாவ்ஜ் இ ஷா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கிராமவாசிகள் 14 பேர் சிக்கி கொண்டனர். பின்னர் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.இதுதவிர 3 பேர் காயமடைந்து உள்ளனர். சமீப வாரங்களாக பதக்ஷான் பகுதியில் பனிப்பொழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. மலைப்பிரதேசத்தில் மாவட்ட சாலை ஒன்றில் இந்த பேரிடர் ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து மீட்புக் குழு ஒன்றும், உள்ளூர் போலீசாரும் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *