நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜான்கேபே மாகாணத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர்.அப்போது பள்ளி அருகில் இருந்த ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தினார்கள். பின்னர் பள்ளியில் இருந்த 317 மாணவிகளை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
பள்ளிக்குள் பயங்கரவாதிகள் பல மணி நேரம் இருப்பதற்காக வெளியில் இருந்த பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியபடி இருந்தனர். இதனால் மாணவிகளை கடத்தி செல்வதை தடுக்க முடியவில்லை.பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 317 மாணவர்களை மீட்கும் நோக்கில் ஒரு கூட்டு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் போலீசார் தொடங்கியுள்ளனர்” என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஷெஹு தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 42 பேர் கடத்தப்பட்டனர். அவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.