சவுதி கூட்டுப்படையால் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை அழிப்பு

ஏமன் நாட்டின் அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் 2014-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போர் நீண்ட காலம் நடந்து வருகிறது.ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நிதி உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

அதே நேரத்தில் ஏமன் நாட்டின் அரச படைகளுக்கு ஆதரவாக 2015-ம் ஆண்டு முதல் சவுதி கூட்டுப்படைகள் களம் இறங்கி சண்டைபோட்டு வருகி்ன்றன.ஏமன் நாட்டின் வடக்கு பகுதியில் பெரும்பாலான இடங்களை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தி உள்ளனர். அந்த நாட்டின் தலைநகர் சனாவும் அவர்கள் வசமே உள்ளது. ஏமன் நாட்டின் அரச படைகளுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள சவுதியை பழிவாங்கும் விதமாக அந்த நாட்டின் மீது அவ்வப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் தென்மேற்கு நகரமான காமிஸ் முஷாய்ட் நகரை நோக்கி நேற்று முன்தினம் ஏவிய ஏவுகணையை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்து உள்ளதாக சவுதியில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *