இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முதலாவது அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.கனடா, ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்குக் கிடைக்கவிருக்கும் தொழில்களுக்கு தகுதி வாய்ந்த இளைஞர் – யுவதிகளை இந்த நிலையத்தின் ஊடாக அனுப்ப எதிர்பார்க்கப்பட்டுள்ளது.சுபீட்சத்தின் இலக்கு என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்படவிருக்கின்றன என்று இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன இதன் போது தெரிவித்தார்.