சித்தி 2 தொடரிலிருந்து வெளியேறினார் நடிகை ராதிகா

ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த சித்தி நெடுந்தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் அதில் கதாநாயகியாக நடித்த ராதிகாவும் சின்னத்திரையின் நெ.1 நடிகையாக ஆனார்.அதன் பின் சில தொடர்களையும் தயாரித்து நடித்திருந்த ராதிகா தற்போது சித்தி 2 தொடர் நடித்து வந்தார் .

இந்நிலையில் சித்தி 2 தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராதிகா சமீபத்தில் திடீரென அறிவித்தார். சித்தி 2 மற்றும் மெகா தொடர்களில் இருந்து விலகுகிறேன். சன் டிவியில் என்னுடைய சிறந்த வருடங்களையும் கடின உழைப்பையும் அளித்துள்ளேன். என்னுடன் நடித்தவர்களிடமிருந்து சோகத்துடன் விடைபெறுகிறேன் என்று ட்வீட் செய்தார். எனினும் சித்தி 2 தொடர வேண்டும். கவின், வெண்பா, யாழினிக்கு வாழ்த்துகள். சித்தி 2 தொடரைத் தொடர்ந்து பாருங்கள் என்றார்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவராக சரத்குமார் உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தன் கணவருடன் இணைந்து தீவிர அரசியல் ஈடுபடவுள்ளார் ராதிகா. சமத்துவ மக்கள் கட்சியில் முதன்மை துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு ராதிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளதால் சிறிது காலத்துக்குக் கட்சிப் பணியில் முழு நேரமும் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.

அதனால் தான் சித்தி 2 தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் ராதிகா போட்டியிடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் வரை அரசியலில் ஈடுபடவுள்ள ராதிகா, தேர்தல் முடிந்த பிறகு படங்களில் மட்டுமே நடிப்பை தொடருவார் என எதிர்பாக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *