பிரித்தானியாவில் கொரோனா விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் சிறை

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் எச்சரித்துள்ளார்.கொரோனா தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள ஹான்காக் புதிய கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.மேலும் சிவப்பு பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள 33 நாடுகளில் இருந்து வருவதை மறைக்கும் பயணிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.பிரித்தானியாவில் இதுவரை 39 லட்சத்து 72 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *