இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 955 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் மட்டும் 976 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது .அதன்படி, நாட்டில் இதுவரை 72,166 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.