அடக்கு முறைக்கு என்றும் அடிபணியமாட்டேன்- சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா சென்னை வந்தடைந்தார். அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர் தொண்டர்கள் மத்தியில் அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி சசிகலா பேசினார்.அப்போது “விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்” ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா? எனக் கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *