விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடும் பாகிஸ்தான்-காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்க இந்திய மத்திய அரசு உத்தரவு

 

இந்திய மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் 75வது நாளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.அதற்கு சில அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்களிடம் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட்து.இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து வரும் 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டுவிட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு கூறியிருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை டுவிட்டர் நிறுவனம் அந்த வேண்டுகோளை முழுமையாக ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *