ஒன்லைன் கேம் விளையாடிய 16 வயது சிறுவன் மரணம்!

தமிழ்நாடு-புதுச்சேரியில் 16 வயது சிறுவன் தொடர்ந்து 4 மணிநேரமாக மொபைலில் கேம் விளையாடிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் புதுச்சேரி பகுதியில் உள்ள வில்லியனுர் கிராமத்தில் தர்ஷன் எனும் 16 வயதான சிறுவன் நேற்றிரவு தொடர்ந்து 4 மணி நேரமாக மொபைலில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான் .சிறுவனின் தந்தை பச்சையப்பன் எதேச்சையாக தன் மகனை பார்த்தபோது, அவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளான்.பதறிப்போன பெற்றோர்கள் இரவு 11.40 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைக் கேட்ட பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.இந்நிலையில், நான்கு மணி நேரம் தொடர்ந்து மொபைலில் கேம் விளையாடியா நிலையில் சிறுவன் உயிரிழந்த சோக சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தர்ஷன், தொடர்ந்து கேம் விளையாடியதால் தான் இறந்துவிட்டானா அல்லது வேறு ஏதும் நோய் காரணமாக இறந்தானா என்பது குறித்து தெரியவில்லை.இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *