இலங்கையில் கொழும்பிலுள்ள ஆறுவைத்தியசாலைகளில் வெள்ளிக்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி வழங்குதல் ஆரம்பம்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு வழங்கி வருகிறது.அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா இலவசமாக 5 லட்சம் கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது. மும்பையில் இருந்து இன்று விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து மதியம் கொழும்பு சென்றடைந்தது. அந்த மருந்துகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு விமான நிலையத்தில் பெற்றுக் கொண்டார் இலங்கைக்கு தடுப்பூசி மருந்து வழங்கி உதவி செய்த இந்திய மக்களுக்கும், பிரதமருக்கும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன.பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை ஹோமாஹம ஆதார வைத்தியசாலை முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அடுத்தவாரம் ஏனையவைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *