வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீண்டும் மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது.இதனால் வடகொரியாவை சேர்ந்த அரசு எதிர்ப்பாளர்கள் பலர் அண்டை நாடான தென் கொரியாவுக்கு தப்பி சென்று அங்கு அடைக்கலம் புகுந்து வருகின்றனர். இந்நிலையில் குவைத் நாட்டுக்கான வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்த ரியூ ஹியூன் வூ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.