உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன.இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றனர்.அதற்கு முன் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு கொரோனா தடுப்புக்கான முதல் டோஸ் டிச்மபர் 29-ம் தேதி உட்செலுத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிசுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று உட்செலுத்தப்பட்டது.அப்போது பேசிய கமலா ஹாரிஸ், அனைவரும் அவரவர் முறை வரும்போது தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவே உங்கள் உயிரைக் காக்கும் என தெரிவித்துள்ளார்.