அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.பதவியேற்ற உடனேயே 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் பைடன். கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம் குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும். எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கர்கள் மாஸ்க் அணிவதை முந்தைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.