மங்கோலியா நாட்டில் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமுக்கு ஆஸ்பத்திரியில் அணியும் பிஜாமாவுடன் அனுப்பி வைத்தனர். -25 டிகிரி குளிரில் அப்பெண்ணை பச்சிளம் குழந்தையுடன் தனிமை முகாமுக்கு அனுப்பிய காட்சி, டி.வி. சேனல்களில் வெளியானது.பின்னர் இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.இதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. தலைநகர் உலான் படோரில் நேற்று முன்தினம் போராட்டங்கள் வெடித்தன.இதற்கு பொறுப்பேற்று துணை பிரதமரும், சுகாதாரத்துறை மந்திரியும் ராஜினாமா செய்தனர்.அவர்களை தொடர்ந்து, பிரதமர் உக்னா குரேல்சுக் நேற்று பதவி விலகினார்.