பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர்

பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.இதனால் பல நாடுகள் பிரித்தானியாவுக்கான சகல போக்குவரத்துக்களையும் நிறுத்தியுள்ளன இந்நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,43,600 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 94,580 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 16 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *