இன்று காலை மண்டைதீவு ஜே 07 கிராம சேவகர் பிரிவில் 29 பேரின் 18 ஏக்கர் காணிகளை சுவீகரிப்புக்காக நிலஅளவைத் திணைக்களத்தினர் அளவீட்டு பணிக்காக அங்கு சென்றபோது, பொதுமக்கள் அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டனர்.இதையடுத்து, காணி அமைச்சின் மேலதிக ஆலோசனையை பெறும் வரையில் நில அளவை பணியை நிறுத்தி வைப்பதாக வேலணை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.மேலதிக ஆலோசனை கிடைக்கும் வரை வரும் நாட்களில் அளவீடு செய்யப்பட்ட இடங்களிலும் அளவீடு நடைபெறாது என தெரிவித்தார்.