இந்தியா முதல் இன்னிங்ஸில் 336-க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே வார்னர் 1 ரன்னில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 5 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்டீவ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் . 4-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் மேத்யூ வடே ஜோடி சேர்ந்தார். லாபஸ்சேன் 37 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்தில் ராஹேனியுடம் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ரஹானே அந்த வாய்பை தவறவிட்டார்.அதனால் அரைசதம் அடித்த லாபஸ்சேன், அரை சதமாக மாற்றினார். மறுமுனையில் மேத்யூ வடே 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த லாபஸ்சேன் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி நடராஜன் அசத்தினார். இந்த ஜோடி 113 ரன்கள் எடுத்தது.லாபஸ்சேன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 65.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.6-வது விக்கெட்டுக்கு டிம் பெய்ன் உடன் கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது. கேமரூன் க்ரீன் 28 ரன்களுடனும், டிம் பெய்ன் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இதையடுத்து, 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய டிம் பெய்ன் 50 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் அவுட் ஆனார். 47 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் க்ரீனும் வெளியேறினார்.அடுத்துவந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது புஜாரா 8 ரன்னுடனும், ரஹானே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் கடைசி பகுதி ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை பதிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.வார்னர் மற்றும் ஹரிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *