12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது அந்நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை

கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது குடிமக்ககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரோனா வைரஸ் கட்டுக்குள் இல்லாத நாடுகளுக்கும் மற்றும் புதிய உருமாறிய தொற்றுகள் பதிவான நாடுகளுக்கும் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அமைச்சகம் தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.மேலும் லிபியா, ஏமன், லெபனான், துருக்கி, ஆர்மீனியா, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான், சோமாலியா, பெலாரஸ், காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆபத்துள்ள நாடுகளில் உள்ள சவுதி அரேபிய குடிமக்கள் உடனடியாக சவுதி அரேபிய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *