இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை தரைமட்டமானது அதில் இருந்த நோயாளிகள்,ஊழியர்களில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்
6.2 ரிக்டர் அலகு பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையான ஆட்டம் கண்டன . பொதுமக்கள் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்இடிபாடுகளில் சிக்கி சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *