‘மாஸ்டர்’ மாஸாக உள்ளது – நடிகர் சூரி

மதுரையில் உள்ள கோபுரம் தியேட்டரில் இன்று அதிகாலை நடிகர் சூரி ரசிகர்களுடன் அமர்ந்து மாஸ்டர் படத்தை பார்த்தார். படம் முடிந்த பின் நடிகர் சூரி செய்தியாளர்களிடம் திரை அரங்கிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாஸ்டர் படம் மாஸ் ஆக உள்ளது.என்றும் தெரிவித்தார்
மேலும் அவர் கொரோனா காலத்தில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். எல்லா துறையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. அதிலும் சினிமா துறை மிகவும் பாதிக்கப்பட்டது.
தற்போது விஜய், சிம்பு படம் மூலம் ரசிகர்களை திரை அரங்கங்களுக்கு வரவழைத்தது , வரவேற்கத்தக்கது. அதிக நாள் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியாது. ஒரு காலகட்டத்தில் நாம் வெளியே வந்துதான் ஆக வேண்டும் என்றும் கூறினார்
அதே நேரத்தில் அரசு கூறும் கொரோனா தடுப்பு விதிகளை ரசிகர்களும், பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ? அந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *