‘பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இந்த தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது
மரபணு மாறிய வைரஸ் தான் அவருக்கு தொற்றியுள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மரபணு மாறிய புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும்,அதிகமாக பரவும் தன்மை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.