
கொரோனா ஊரடங்கு தொடர்பில் தமது கட்சி எம்.பி-க்களிடம் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஆலோசித்த தகவல் கசிந்துந்துள்ளது.ஜேர்மனியில் தற்போது வரை 19,33,826 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 41,577 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஏப்ரல் மாதம் ஆரம்பம் வரை ஊரடங்கு நீடிக்க வேண்டும் என தனது கன்சர்வேடிவ் எம்.பி-க்களுடனான சந்திப்பில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை மேற்கோள்காட்டி ஜேர்மன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.