இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த நால்வரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது
இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடன் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது இன்னும் கேள்விக்கிடமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .