கொரோனாவின் உருவாக்கம் குறித்து விசாரணை

கொரோனா உருவானது பற்றி நேரடி விசாரணைக்காக , உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் விஜயம் .செய்கிறது
கொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அங்குள்ள சந்தையில் இருந்து உருவாகி, மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று உலகம் முழுவதும் பரவலாக கருதப்படுகிறது
கொரோனா உருவானது எப்படி என்பது குறித்து , சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம், உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, உலக சுகாதார நிறுவனம், விசாரணை நடத்த 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு, சீனாவின் உகான் நகருக்கு நேரில் சென்று விசாரணை நடத்த விரும்பியது. ஆனால், சீனா அனுமதி அளிக்கவில்லை . இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சமீபத்தில், உலக சுகாதார நிறுவன தலைவர், சீனாவின் செயல் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
இந்தநிலையில், உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு வருகைக்கு சீனா நேற்று அனுமதி அளித்தது
இதையடுத்து 14-ந் தேதி, உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட நிபுணர் குழு, சீனாவுக்கு வந்து நேரடி விசாரணை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *