சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அதன்பின் மருத்துவர்களின் அறிவுறுத்தலை
தொடர்ந்து தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை எனவும், அதற்கான காரணங்கள் குறித்தும் கூறி ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரஜினி.
இந்நிலையில் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என அவரின் ரசிகர்கள் பலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தற்போது ரஜினி “நான் அரசியலுக்கு வர முடியவில்லை, என்பதற்கான காரணங்களை ஏற்கனவே கூறிவிட்டேன், நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்” என கூறி மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்
— Rajinikanth (@rajinikanth) January 11, 2021