
இலங்கையில் தனி தமிழ் ஈழம் கோரி நடந்த போர், கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இந்தப் போரில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஈழப் போரின்போது முள்ளி வாய்க்கால் பகுதியில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் ஒன்று கடந்த 2019ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு தரப்பினர் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்து தள்ளியுள்ளனர். இச்சம்பவம் உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்
யாழ்பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை குறித்த நடிகரும் மக்கள் நீதி மைய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில்கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்கமுடியாது என தெரிவித்துள்ள அவர் சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது எனவும் பதிவிட்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறுமனே கட்டுமானம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ள கமலஹாசன் வரலாறு மாறாது நினைவுச்சின்னத்தை இடித்தவர்களே நினைவுகளை என்ன செய்வீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.