இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் அரசாங்கத்திற்குள்ளிருந்து முரண்பட்ட தகவல்கள்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன – அமைச்சர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்பது அவர்களது முரண்பட்ட அறிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது.

நிபுணர் குழு உடல்களை அடக்கமும் செய்யலாம் என தெரிவித்திருந்தாக இரண்டு தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியான நிலையில் இன்று கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை மத அரசியல் காரணங்களிற்காவோ அல்லது வேறு காரணங்களிற்காகவோ மாற்றப்போவதில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *