மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்னும் திட்டத்துக்கு – நடிகை கங்கனா ரணாவத் கடும் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமானகமல்ஹாசன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது இல்லத்தரசிகளுக்கு ஊதியம் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றுவது உள்ளிட்ட 7 அம்சத் திட்டங்களை வெளியிட்டார்.அதில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் அந்தத் திட்டம், சாத்தியமுள்ள செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம்” என்று குறிப்பிட்டார்.கமல்ஹாசனின் இந்த திட்டத்தை பாராட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசிதரூர் எம்.பி. தனது டுவிட்டர் “இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளைச் சம்பளம் பெறத்தக்க பணியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் எண்ணத்தை நான் வேற்கிறேன் என பதிவிட்டிருந்தார்.இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கங்கனா ரணாவத், சசிதரூரின் டுவிட்டை மேற்கோள் காட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.எங்கள் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் வைத்திருக்கும் உறவுக்கு ஒரு விலை அட்டையை ஒட்டாதீர்கள். எங்கள் தாய்மைக்கு சம்பளம் வேண்டாம். எங்களுக்கே உரித்தான ஒரு குட்டி ராஜ்ஜியத்தில் நாங்கள் ராணியாக இருக்க எங்களுக்கு சம்பளம் வேண்டாம்.எல்லாவற்றையும் தொழிலாக பார்க்காதீர்கள். மாறாக உங்கள் நேசிக்கும் மனைவியிடம் சரணாகதி ஆகிவிடுங்கள். பெண்களுக்குத் தேவை நீங்கள் கொடுக்கும் மரியாதையும், பகிரும் அன்பும்தான். சம்பளம் அல்ல என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *