இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து கோரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரிலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற பெயரிலும் தயாரித்து வருகிறது.இந்த இரண்டு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்திய அரசு நேற்று முன் தினம் அனுமதி அளித்ததை தொடர்ந்து கோரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
It’s great to see India’s leadership in scientific innovation and vaccine manufacturing capability as the world works to end the COVID-19 pandemic @PMOIndia https://t.co/Ds4f3tmrm3
— Bill Gates (@BillGates) January 4, 2021
இதனை மேற்கோள்காட்டி மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவியலின் புதுமையான கண்டுபிடிப்புகளிலும்,கொரோனா தடுப்பூசி உற்பத்தியும் மேற்கொள்வது சிறப்பாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.