ஜேர்மனியில் பொது முடக்கம் கடும் கட்டுப்பாடுகளுடன் வரும் ஜனவரி 31ம் திகதி வரை நீட்டிப்பு

ஐரோப்பாவில், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 11,897 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் அத்துடன் 944 பேர் கொரோனாவால் பலியாயினர் இதுவரை 35,000 பேர் இறந்துள்ளனர். இன்னிலையில்


ஜேர்மனியில் கடந்த டிசம்பர் 16 ம் திகதி அறிவிக்கப்பபட்ட பொது முடக்கம் வரும் ஜனவரி 10ம் திகதியுடன் முடிவடையும் நிலையில் இன்று நடந்த 16 மாநில தலைவர்களுடனான சந்திப்பின் பின் ஜேர்மன் அதிபர் மேர்க்கெல் கொரோனா வைரசால் பெருகி வரும் இறப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பொதுமுடக்கத்தை வரும் ஜனவரி 31ம் திகதி வரும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட்டித்தார்.மேலும் பொதுமுடக்கம் பின்வரும் கட்டுப்பாடுகளுடன் பின்பற்றவேண்டும் எனவும் அறிவித்தார்
.

*பெரும்பாலான உணவு சாராத கடைகள், பார்கள், உணவகங்கள், கலாச்சார மற்றும் ஓய்வு வசதிகள் மற்றும் பள்ளிகள் மூடப்படும், அத்துடன் புதிய விதிகள் கொண்டுவரப்படும்.

*தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு எங்கள் சமூக தொடர்புகளை மேலும் குறைக்க வேண்டும்” .

*புதிய விதிகளின் கீழ், வைரஸின் ஹாட்ஸ்பாட்களாகக் கருதப்படும் பகுதிகளில் உள்ளவர்கள்
காரணமின்றி தங்கள் வீடுகளிலிருந்து 15 கி.மீ தூரத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்
.

*அதிக ஆபத்து என்று கருதப்படும் நகரங்களில் அல்லது நாடுகளில் இருந்து வருபவர்கள் இரண்டு முறை எதிர்மறை சோதனை முடிவுகளை வழங்க வேண்டும்,

முதல் சோதனை எதிர்மறையான சந்தர்ப்பங்களில் கூட கட்டாய ஐந்து நாள் தனிமைப்படுத்தலுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும் .

*தனிப்பட்ட முறையில் வீடுகளில் கூடுவோர் அதிகபட்சம் வெளியில் இருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் .

இந்த நடைமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *