தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்டில் இலங்கை 2-வது நாள் முடிவில் 150/4 எடுத்தது

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

This image has an empty alt attribute; its file name is Srilanka-vs-SA.jpg

கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் கருணாரத்னே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிமானே 17 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 0 ரன்னிலும் வெளியேறினர்.

அதன்பின் அன்ரிச் நோர்ஜோ அபாரமாக பந்து வீசினார். குசால் பேரேரா 67 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இலங்கை 157 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா அணியின் அன்ரிச் நோர்ஜோ 6 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் விளையாடிய

தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் விளாசியது. எல்கர் 92 ரன்களுடனும், டுஸ்சென் 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டீன் எல்கர் சதம் அடித்து 127 ரன்னில் வெளியேறினார். டுஸ்சென் அரைசதம் அடித்து 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டகாரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி இருந்தாலும் திமுத் கருணாரத்னே சிறப்பாக விளையாடி இலங்கையின் ஸ்கோர் உயர்ந்தது.

2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை 5 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கருணாரத்னே 91 ரன்களுடனும், டிக்வெல்லா 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *