தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட்-முதல் இன்னிங்ஸில் இலங்கை 157 ரன்னில் சுருண்டது.

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் கருணாரத்னே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திரிமானே 17 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 0 ரன்னிலும் வெளியேறினர்.

அதன்பின் அன்ரிச் நோர்ஜோ அபாரமாக பந்து வீசினார். குசால் பேரேரா 67 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இலங்கை 157 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
தென்ஆப்பிரிக்கா அணியின் அன்ரிச் நோர்ஜோ 6 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி தற்போது வரை 1 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களை குவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *