அமெரிக்காவின் கொரோனா நிதியை 2 ஆயிரம் டாலராக உயர்த்த குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கனல் கடும் எதிர்ப்பு!

அமெரிக்காவை கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரசால் . அமெரிக்கர்கள் வேலை இழப்பு, பொருளாதார இழப்பால் அவதியுறுகின்றனர்.

அவர்களுக்கு தலா 600 டாலர் நிதி உதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் முன்வந்தது.

ஆனால் இந்த தொகையை 2 ஆயிரம் டாலர்களாக உயர்த்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்தார்.

அவரது வேண்டுகோளின்படி, ஜனநாயக கட்சி பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான மசோதா நிறைவேறி விட்டது.

இந்த மசோதா செனட் சபையில் நிறைவேற வேண்டும்.

ஆனால் டிரம்பின் முடிவை செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கனல் ஏற்க மறுத்து விட்டார்.

செனட் சபையில் இதற்கான மசோதாவை நிறைவேற்ற முடியாது என அவர் கூறி இருப்பது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு ஜனநாயக கட்சியினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபற்றி செனட் சபையின் ஜனநாயக கட்சி தலைவர் சக் சூமர் கூறும்போது,

2 ஆயிரம் டாலர் நிதி உதவி திட்டத்தை குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கனல் கொல்ல பார்க்கிறார். இது பல அமெரிக்க குடும்பங்களுக்கு மிகவும் தேவைப்படுகிற உதவி ஆகும் என மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *