உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,
இந்தோனேஷியா நாட்டில் ஜகார்த்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த நோயாளியிடம் செவிலியர் ஒருவர் அன்பாக பேசி அவரை கவனித்து வந்தார் .
சில நாட்களில் அவர் கொரோனா நோயாளியிடம் அதிக நெருக்கம் காட்டினார்.நாளடைவில்
அந்த நெருக்கம் விபரீதமாக மாறியது. நோயாளியை கட்டாயப்படுத்தி ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அந்த செவிலியர் கொரோனா நோயாளியிடம் தவறான உறவில் ஈடுபட்டார். அந்த நோயாளி இதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நடத்திய விசாரணையில் கொரோனா நோயாளியிடம் செவிலியர் தவறான பாலியல் தொடர்பில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அந்த செவிலியரும் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த செவிலியரை பணியல் இருந்து நிறுத்த உத்தரவிட்டது.
இதையடுத்து செவிலியருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.
மத்திய ஜகார்த்தா போலீசார் செவிலியர் மீதும் அவருடன் தொடர்பில் இருந்த கொரோனா நோயாளி மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இருவரையும் கைது செய்து இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் இதுவரை 727 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் , 21,000 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.