கமல் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே.
தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குழுக்களிலும் சேராமல் தனது கருத்தை தைரியமாக முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவர் கடந்த திங்கள்கிழமை திடீரென ஆரியுடன் மிகவும் ஆவேசமாக பேசியது பார்வையாளர்களுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் காரணமாகத்தான் இன்று அவர் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பொஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அனிதா வின் முதல் பதிவாக ‘அனைத்திற்கும் நன்றி’ என்று மாத்திரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அனிதா சம்பத்தின் இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் வழக்கம்போல் பல்வேறு விதமான கருத்துக்களும் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.