பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது உருமாற்றம் அடைந்த வைரசா எனக்கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் பதற்றம் அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.