நாளை நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் அறிவிப்பு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் நாளை (26/12/2020) தொடங்குகிறது போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அதன்படி, விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், அஜிங்கியா ரஹானே இந்திய அணி கேப்டனாக செயல்படுவார்.

ரஹானே தலைமையிலான இந்திய அணியில் முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, அஷ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *