கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள்,
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 390 இலங்கைகளும் மெல்போர்னில் இருந்து 120 பேரும் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் இருந்து 69 பேரும் 6 பயணிகள் விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த பயணிகள் பிசிஆர் பரிசோதனைக்குப்பின் தனிமை படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.